Pages

தெய்வத்துள் தெய்வம்




தெய்வத்துள் தெய்வம் ரஜினிதெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.

எழுதியவர்: Phantom Mohan
அதிகாரம் : ரஜினி பக்தன் எனும் அதிகாரம்
குறள் விளக்கம்:

தெய்வம் என்றால் யார்????

வேறு யார் நமது ஒரே தெய்வம் பத்மபூஷண் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான்.

எங்க ஊரில் நாளைக்கே எந்திரன் ரிலீஸ். நாளைக்கு கோவிலுக்குப் போகப் போறேன் (தெய்வம் வாழும் இடம் கோவில், அதன் படி ரஜினி படம் வெளியிடும் தியேட்டர் தான் அந்தக் கோவில்)

தலைவரின் பக்தகோடிகளுக்கு நாளை கோவிலுக்கு செல்லும் போது, பரவச நிலையில் ஒன்றை மறந்து விடாதீர்கள். பின் அது தெய்வகுத்தம் ஆகிவிடும். நாளை தியேட்டருக்குள் செல்லும் போது மறவாமல் தங்களது பாதணிகளை வெளியிலே விட்டுச் செல்லவும், செருப்போடு கோவிலுக்குள் செல்வது தீட்டு.

எனக்கு லக்கப் பாருங்க, சிவாஜி படமும் ரிலீஸுக்கு ஒரு நாள் முன்னாடியே பார்த்தேன், இதுவும் ஒரு நாள் முன்னாடியே பார்க்கப்போகிறேன்.

எல்லாரும் சந்தோஷமா எந்திரன் பாருங்க, நம்பிக்கையோடு போங்க தெய்வம் உங்களை கைவிடாது.

தலைவரை வாழ்த்த எனக்கு தகுதி கிடையாது, எப்படியும் படம் மெகா ஹிட். அதனால உங்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த எந்திரன் வாழ்த்துக்கள்.

Happy Enthiran Wishes.





என்னா ஸ்டைலு..என்னா ஸ்டைலு...


ஸ்டில்லுக்குன்னே பொறந்தவர்யா நம்மாளு.



தலைவர் போட்டோவில் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த போட்டோ கீழே உள்ளது.





31 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

neeyumaa?

ஸ்ரீ.கிருஷ்ணா said...

எந்திரன் பாருங்க, ...எந்திரன் பாருங்க, ..எந்திரன் பாருங்க, ..

பருப்பு (a) Phantom Mohan said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
neeyumaa?
///////////////////////////

நான் ரஜினி பக்தன்னு ரொம்ப பெருமையா சொல்லுவேன் தல...நாளைக்கு ஆபிஸுக்கு லீவ் போட்டேன் பாஸ், reason for leave - ரஜினி படம் ரிலீஸ்-ன்னு தான் போட்டேன், மானங்கெட்ட கேள்வி கேட்டானுங்க, வெளின்நாட்டுக்கு வந்தும் நீங்க திருந்தலையான்னு, இன்னும் அசிங்க அசிங்கமா நிறையா (வேற யாரா இருந்தாலும் நாக்க புடுங்கிட்டு செத்திருப்பான், நமக்கு தான் இதெல்லாம் பிகர் சைட் அடிக்கிற மாதிரி ஒரு பரவச நிலை தருமே) கவலையே படமா சொன்னேன், நீங்க லீவ் குடுக்கலைன்னா நான் எப்படியும் மெடிக்கல் லீவ் போடுவேன்னு, போய்த்தொலைன்னு சொல்லிட்டானுங்க. எப்பூடி...

பருப்பு (a) Phantom Mohan said...

புதிய மனிதா said...
எந்திரன் பாருங்க, ...எந்திரன் பாருங்க, ..எந்திரன் பாருங்க, ..

September 29, 2010 5:22 PM
////////////////////////////

பக்த கோடிகளுக்கு எனது வணக்கங்கள்..மறந்திராமா செருப்ப கழட்டிட்டு போங்க பாஸ். எவன் திட்டினாலும், காறித்துப்பினாலும் கவலை படவேண்டாம்.

கோவிலுக்கு சென்று கடவுள் தரிசனம் பெற்று மோட்சம் அடையுங்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vazhthukkal. naanum thuppuren.

முத்து said...

கொடுத்து வைச்ச ஆளுயா நீ ஒரு நாள் முந்தியே பார்குற

பருப்பு (a) Phantom Mohan said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
vazhthukkal. naanum thuppuren.

September 29, 2010 5:36 PM
////////////////////////

ஹைய்யா ஜாலி...போலீஸ் என்ன காறித்துப்பிட்டாரு...ரொம்ப ரொம்ப நன்றி பாஸ்.

பருப்பு (a) Phantom Mohan said...

முத்து said...
கொடுத்து வைச்ச ஆளுயா நீ ஒரு நாள் முந்தியே பார்குற

September 29, 2010 5:37 PM
//////////////////////////

ஏன்யா உங்க ஊரில் ரிலீஸ் ஆகலையா?? அங்க எங்க இந்தியன் எம்பஸி இருக்குன்னு பார்த்து அதுக்கு முன்னால நின்னு தீக்குளிய்யா, ஆட்சியக் கலைக்க சொல்லுவோம்..என்ன கொடுமை சார் இது???

எஸ்.கே said...

ஜாலியா பாருங்க, என்ஜாய் பண்ணுங்க!
பார்த்துட்டு படம் எப்படின்னு சொல்லுங்க!

பருப்பு (a) Phantom Mohan said...

எஸ்.கே said...
ஜாலியா பாருங்க, என்ஜாய் பண்ணுங்க!
பார்த்துட்டு படம் எப்படின்னு சொல்லுங்க!

September 29, 2010 5:58 PM
///////////////////////////////

பார்க்காமலே சொல்லுறேன் படம் சூப்பர் பாஸ். நீங்களும் பாருங்க, இதெல்லாம் ஒரு சந்தோஷம் பாஸ், சத்தத்தோட பார்த்தா தான் அது ரஜினி படம். சீக்கிரம் பாருங்க

முத்து said...

முத்து said...
கொடுத்து வைச்ச ஆளுயா நீ ஒரு நாள் முந்தியே பார்குற

September 29, 2010 5:37 PM
//////////////////////////

ஏன்யா உங்க ஊரில் ரிலீஸ் ஆகலையா?? அங்க எங்க இந்தியன் எம்பஸி இருக்குன்னு பார்த்து அதுக்கு முன்னால நின்னு தீக்குளிய்யா, ஆட்சியக் கலைக்க சொல்லுவோம்..என்ன கொடுமை சார் இது???/////////////


அப்போ சிப்பு போலிசை தீ குளிக்க வைச்சுட வேண்டியது தான்

பருப்பு (a) Phantom Mohan said...

சிரிப்பு போலீஸ் என்ன பதிவுலக ஊறுகாயா???

எதுக்கெடுத்தாலும் அவரத்தான் சொல்றீங்க, ரொம்ப நல்லவர் சார் அவரு சத்தியமா?? மேலதிக தகவலுக்கு நம்ம பட்டாபட்டிய தொடர்பு கொள்ளுங்க...

அவரே கூட இங்க வந்து போலீசப் பத்தி பெருமையா சொல்லுவாரு..wait and see

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// தெய்வத்துள் தெய்வம் ரஜினிதெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.

எழுதியவர்: Phantom Mohan
அதிகாரம் : ரஜினி பக்தன் எனும் அதிகாரம் ////

ஜூப்பரு .....,வாழ்க ரஜினி

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// பார்க்காமலே சொல்லுறேன் படம் சூப்பர் பாஸ். நீங்களும் பாருங்க, இதெல்லாம் ஒரு சந்தோஷம் பாஸ், சத்தத்தோட பார்த்தா தான் அது ரஜினி படம். சீக்கிரம் பாருங்க ///

இப்படி இப்படிதான் தீயா இருக்கனும் ...,முதல் நாளே பார்க்க போறீங்க ...,,ஹ்ம்ம் என்ன சொல்றது ...,

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

///// இதெல்லாம் ஒரு சந்தோஷம் பாஸ், சத்தத்தோட பார்த்தா தான் அது ரஜினி படம்.////

சந்தோசம் தான் பாஸ் ...,அந்த சந்தோஷத்தை யாராலும் கொடுக்க முடியாது ...,இது திண்ணம் .சிவாஜி படத்துக்கு FDFS போனோம் ....,ஒரு நாலு பேரு என் பக்கத்துல உட்காதிருந்தாங்க ...,ஒரு 35 வயசு இருக்கும் ..., செம்ம டிசண்டா இருந்தானுங்க ....,இன்னடா இது இவனுங்க பக்கத்துல பொய் உக்காஞ்சமேன்னு
பீல் பண்ணிடுருக்கும் போது ....,தலைவர் முகத்துல துணியை மூடனும் போலீஸ் சொல்லும் போது ...ஹும் ன்னு சொல்லுவாரு அப்போ கத்தனாங்க ..பாரு ...அப்புறம் தலைவர் முகத்தை காட்டும் சீன் நாலு பெரும் எந்திரிச்சு ஸ்க்ரீன் முன்னாடி போய் ...,நம்ம பர்த்டே பார்டியில ஒரு நுரையை அடிப்போமே அத வைச்சு theatre பூரா ..அடிச்சானுவ.ஒரே கோலகலமா இருந்துச்சு ...,ஹ்ம்ம் நினைக்கவே எவ்ளோ சந்தோசம் ...இதை அவர் (ரஜினி )மட்டும் தான் தருவாரு

பருப்பு (a) Phantom Mohan said...

பனங்காட்டு நரி:

நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. ரஜினி ரஜினி தான் பாஸ்..இன்னொருத்தன் பொறந்து வந்தாலும் இந்த அளவுக்கு மாஸ் இருக்குமான்னு சந்தேகம் தான். ரஜினி படத்தை எதிர்ப்போம்ன்னு சொல்றவங்க எல்லாம் வயித்தெரிச்சல்ல தான் அப்ப்டி பேசுவாங்க, எவன் எக்கேடும் கெட்டு போகட்டும்...நாளைக்கு இருக்கு கச்சேரி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடப்பாவி நீயுமா? சரி சரி, என் கடைப் பக்கம் ஒரு எட்டு வந்துட்டு போ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன இருந்தாலும் ரஜினிக்கு பாட்சா மாதிரி வராது!

இப்படிக்கு,
குப்புறப் படுத்துக்கொண்டு பாட்சா படத்தையே பார்த்துக் கொண்டிருப்போர் சங்கம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//என்னைப் பற்றி விரிவாக எழுதுபவர்களுக்கு / விளக்குபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.//

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சிரிப்பு போலீஸ் என்ன பதிவுலக ஊறுகாயா???

எதுக்கெடுத்தாலும் அவரத்தான் சொல்றீங்க, ரொம்ப நல்லவர் சார் அவரு சத்தியமா?? மேலதிக தகவலுக்கு நம்ம பட்டாபட்டிய தொடர்பு கொள்ளுங்க...

அவரே கூட இங்க வந்து போலீசப் பத்தி பெருமையா சொல்லுவாரு..wait and சி//

அதான ஏற்கனவே நான் சொல்லிட்டேன்,
தலை சீவுவது ஒரு பாவச் செயல்
பல் விளக்குவது பெருங்குற்றம்
குளிப்பது ஒரு தீண்டத்தகாத செயல்

இனி எவனாவது என்னை குளிக்கவோ, தீக் குளிக்கவோ சொன்னா பிச்சுபுடுவேன். ராஸ்கல்ஸ்.

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க ரஜினியோட இவ்வளவு தீவிர ரசிகர்னு தெரியாம போச்சே? ஈரோட்ல 1ந்தேதி விடிகாலை 4 மணிக்கே முத ஷோ,வர்றீங்களா?

"ராஜா" said...

தல உங்களுக்காக சில ரஜினிகுறள்கள்

"அகர முதல எழுத்தெல்லாம் ரஜினி பகவான்
முதற்றே உலகு...

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண எந்திரன்
டிக்கெட்முதல் காட்சி வாங்கி தரல்"

இம்புட்டு ஆர்வமா போறீங்க ... படம் நல்லா இருந்தா சரி ....
வாழ்த்துக்கள்

பருப்பு (a) Phantom Mohan said...

சி.பி.செந்தில்குமார் said...
நீங்க ரஜினியோட இவ்வளவு தீவிர ரசிகர்னு தெரியாம போச்சே? ஈரோட்ல 1ந்தேதி விடிகாலை 4 மணிக்கே முத ஷோ,வர்றீங்களா?

September 30, 2010 6:13 AM
//////////////////////////////

இந்தியாவில் அக்டோபர் 1 ரிலீஸ். இங்க இன்று (செப்டம்பர் 30) ரிலீஸ், உங்களுக்கு ஒரு நாள் முன்னாடியே நான் பார்த்திடுவேன் பாஸ்

பருப்பு (a) Phantom Mohan said...

"ராஜா" said...
தல உங்களுக்காக சில ரஜினிகுறள்கள்

இம்புட்டு ஆர்வமா போறீங்க ... படம் நல்லா இருந்தா சரி ....
வாழ்த்துக்கள்

///////////////////////////

படம் நல்லா இருந்தா என்னா?? இல்லாட்டி தான் என்ன? எனக்கு தேவை ரஜினிய ஸ்கிரின்ல பார்க்கணும், அவ்ளோ தான்.

கருடன் said...

அட பாவி உனக்கு சொந்த வீடு இருக்கா?? ஒரு வார்த்தை கூப்டிய நீ??

பருப்பு (a) Phantom Mohan said...

யோவ் டெரர், உன்ன யாருய்யா இங்க வரச்சொன்னது. இது கமெண்ட் போட ஒரு ஐடி வேணுமேன்னு கிரியேட் பண்ணது.

இங்கெல்லாம் வரக்கூடாது சரியா? போ போய் அந்தப் பக்கமா எங்கயாவது போய் விளையாடு

கருடன் said...

எலேய் நாசகார!! 19 பதிவு எழுதி இருக்க... அப்படி என்ன கர்மத்த எழுதின?? ஊர் எல்லாம் நீ கும்மிடு இங்க சத்தம் இல்லாம ஒரு சின்ன வீடு வச்சி இருக்க...

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

ரஜினி நிறைய நல்லது செய்திருக்காருன்னு கேள்விப்பட்டிருக்கேன். திருவள்ளுவரைகூட உருவாக்குவான்னு இப்பதான் தெரிஞ்சுது. நல்ல குறள்.

http://sagotharan.wordpress.com/

karthikkumar said...

Phantom Mohan said...
"ராஜா" said...
தல உங்களுக்காக சில ரஜினிகுறள்கள்

இம்புட்டு ஆர்வமா போறீங்க ... படம் நல்லா இருந்தா சரி ....
வாழ்த்துக்கள்

///////////////////////////
படம் நல்லா இருந்தா என்னா?? இல்லாட்டி தான் என்ன? எனக்கு தேவை ரஜினிய ஸ்கிரின்ல பார்க்கணும், அவ்ளோ தான்////

தல எனக்கும் அதான் தல

karthikkumar said...

தல நான்தான் கார்த்திக் ஒரு பதிவு போட்ருக்கேன் முதல் பதிவும் கூட http://muraimaman.blogspot.com/2010/10/blog-post.html

ப.கந்தசாமி said...

என்ன மோகன், இப்படி எங்களையெல்லாம் அம்போன்னு உட்டுட்டூங்க, கடயச்சாத்தப் போறீங்களாமே, என்னங்க ஆச்சு, யாராச்சும் எதாச்சும் சொன்னாங்களா, சொல்லுங்க, ஆட்டோ அனுப்பிச்சுடலாம்.

Post a Comment

மேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க...